சூடான செய்திகள் 1

இன்று பிரதி சபாநாயகர் தெரிவு

(UTV|COLOMBO)-பாராளுமன்றத்திற்காக பிரதி சபாநாயகர் நியமனம் இன்று (05) இடம்பெற உள்ளது.

இன்று பாராளுமன்றம் கூடும் போது பிரதி சபாநாயகர் ஒருவர் தெரிவு செய்யப்பட உள்ளதாக பாராளுமன்ற பிரதி செயலாளர் நீல் இத்தவெல கூறினார்.

பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகராக இருந்த திலங்க சுமதிபால அரசாங்கத்தில் இருந்து விலகியதையடுத்து அந்தப்பதவி வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.

அவர் விலகிக் கொண்டது தொடர்பாக இன்று சபாநாயகரால் பாராளுமன்றத்துக்கு அறிவிக்கப்பட உள்ளது.

கூட்டு எதிர்க்கட்சி சார்பாக பிரதி சபாநாயகர் பதவிக்கு சுதர்ஷனி பெர்ணாந்தோபுள்ளேயின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 11 மணியளவில் கூடவுள்ள கூட்டு எதிர்க்கட்சியின் கூட்டத்தில் இது தொடர்பில் இறுதி தீர்மானம் எட்டப்பட உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன கூறினார்.

எவ்வாறாயினும் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் அந்தப் பதவிக்கு ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் முன்வந்தால் வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.

இதேவேளை இன்று பாராளுமன்ற கூட்டத்தொடருக்கு முன்னதாக கட்சித் தலைவர்களின் சந்திப்பொன்று இடம்பெற உள்ளது.

இன்று பகல் 12.00 மணியளவில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இந்த கட்சித் தலைவர்களின் கூட்டம் இடம்பெற உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன கூறினார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ஜனாதிபதி தலைமையில் “நாட்டுக்காக ஒன்றிணைவோம்” மொனராகலை மாவட்ட இறுதி நிகழ்வு இன்று(06)

சிங்கப்பூர்-இலங்கை சுதந்திர உடன்படிக்கை குறித்த அறிக்கை ஜனாதிபதிக்கு கையளிப்பு

இன்றும் நாளையும் இடியுடன் கூடிய மழை