சூடான செய்திகள் 1

சீரற்ற பொலித்தீன் உற்பத்தி பாவனை காரணமாக இலங்கையில் நெருக்கடி நிலை

(UTV|COLOMBO)-சீரற்ற பொலித்தீன் உற்பத்தி மற்றும் பாவனை காரணமாக இலங்கையில் நெருக்கடி நிலை உருவாகி வருவதாக ஹெக்டர் கொப்பேகடுவ கமநல ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

 

 

பொலித்தீன் உற்பத்திகள் உரிய தராதரங்களுக்கு அமைய பயன்படுத்தப்படுவதில்லை. இதன் காரணமாக பெரும் சுற்றாடல் நெருக்கடிகள் தோன்றியுள்ளன. 2006ம் ஆண்டு ஒக்டோபர் 10ம் திகதி 20 மைக்ரோனை விட தடிப்புக்குறைந்த பொலித்தீனை உற்பத்தி செய்வதையும், விற்பனை செய்வதையும், பயன்படுத்துவதையும் தடைசெய்து அரசாங்கம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

 

ஆனால், அன்றைய காலத்துடன் ஒப்பிடுகையில் இன்று முறையற்ற பொலித்தீன் பாவனை இடம்பெறுவதாக விவசாய ஆராய்ச்சி நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

பிரதமருக்காக ஒதுக்கப்பட்ட ஆசனத்தை மஹிந்தவிற்கு வழங்கத் தீர்மானம்

மொட்டுக்கட்சி வேட்பாளர் யார் ? 7ஆம் திகதி அறிவிப்பு வருமாம்

காலநிலையில் மாற்றம்…