விளையாட்டு

தெற்காசிய கனிஷ்ட மேசைப் பந்தாட்டப் போட்டியில் இலங்கை சார்பில் ஆறு அணிகள்

(UTV|COLOMBO)-தெற்காசிய கனிஷ்ட மற்றும் பயிலுனர் மேசைப் பந்தாட்டப் போட்டியில் இலங்கை சார்பில் ஆறு அணிகள் பங்கேற்கவுள்ளன.

 

இந்த போட்டி மாலைதீவில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

 

இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம்;; ஆகிய நாடுகள் பங்கேற்கும் இந்தப் போட்டியில் 12 வயதிற்கு உட்பட்ட போட்டிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன. இலங்கை சார்பில் 12 வயதிற்கு உட்பட்ட ஆடவர் மற்றும் மகளிர் போட்டியாளர்கள் இதில் பங்கேற்கவுள்ளனர். எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறும் இந்தப் போட்டி ஓகஸ்ட் மாதம் மியன்மாரில் நடைபெறும் ஆசிய சம்பியன் போட்டிக்கான தகுதிகாண் போட்டியாக கருதப்படும்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

அரையிறுதியில் சாய்னா தோல்வி

கிரிக்கெட் தேர்தலை விரைவாக நடத்த நடவடிக்கை…

ஸ்மித், வார்னர் மீதான தடையை நீக்க முடியாது-அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்