சூடான செய்திகள் 1

தெல்தெனிய கொலை சம்பவம் – சந்தேக நபர்களது விளக்கமறியல் நீடிப்பு

(UTV|COLOMBO)-கண்டி – தெல்தெனிய எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக கடந்த மாதம் 22 ஆம் திகதி நபரொருவரை தாக்கி கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களும் அடுத்த மாதம் 4 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை இன்று தெல்தெனிய நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களது வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் தினத்தில் அவர்களை அடையாள அணிவகுப்பில் முன்னிலைப்படுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சந்தேக நபர்கள் சார்பில் இன்றைய தினம் எந்தவொரு சட்டத்தரணியும் முன்னிலையாகாமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

 

Related posts

சிறைகூடத்திலிருந்த கனவனுக்கு கஞ்சா கொண்டு சென்ற மனைவி கைது வீட்டிலிருந்து மிருக வேட்டையாடும் குண்டுகளும் மீட்பு

பொலன்னறுவை தேசிய சிறுநீரக மருத்துவமனையின் நிர்மாண தளத்திற்கு ஜனாதிபதி விஜயம்

இத்தாலியில் கொரோனா வைரஸ் – 17 பேர் பலி