வகைப்படுத்தப்படாத

உயிர்நீத்த படைவீரர்களின் நினைவாக அமைக்கப்பட்ட விகாரை புனர்நிர்மாணம்

(UDHAYAM, COLOMBO) – திம்புலாகலமட்டக்களப்பு சந்திக்கருகிலுள்ள பிரதேச செயலக வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த விகாரையை புனர்நிர்மாணத்தின் பின் திறந்து வைக்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.

நாட்டுக்காக உயிர்நீத்த படைவீரர்களை நினைவுகூரும் வகையில் நிர்மாணிக்கப்பட்டிருந்த இந்த விகாரையை நேற்று முன்தினம் புனர்நிர்மாணத்தின் பின் ஜனாதிபதி திறந்துவைத்தார்.

இந்த நிகழ்வில் பொலன்னறுவை மாவட்ட செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன, மாகாண சபை உறுப்பினர் ஜகத் சமரசிங்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related posts

மண்சரிவில் பாதிக்கபட்ட 23 குடும்பங்களை சேர்ந்த 109 பேர் தற்போதும் முகாமில்

நான்கு வாள்களுடன் ஒருவர் கைது

ஆண் குழந்தைக்கு தாயானார் இங்கிலாந்து இளவரசி மேகன்