வகைப்படுத்தப்படாத

வேன் மோதி வவுனியா மாணவி உயிரிழப்பு

(UDHAYAM, COLOMBO) – வவுனியா – பதவிய வீதியில், போகஸ்வெவ வெஹெரதென்ன பிரதேசத்தில் வேன் மோதி பாடசாலை மாணவி உயிரிழந்துள்ளார்.

நேற்றைய தினம் பாடசாலை முடிந்து பேருந்து ஊடாக வீடு திரும்பிய மாணவி, பேருந்தில் இருந்து இறங்கி வீதியை கடந்தபோது, இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

படுகாயமடைந்த மாணவி, பதவிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

9ஆம் தரத்தில் கல்விகற்கும் மாணவியே உயிரிழந்துள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய வேனின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Related posts

சட்டத்தை கையிலெடுத்துள்ள இனவாதத்தேரர்களை கட்டுப்படுத்துங்கள். மன்னாரில் பிரதமர் முன்னிலையில் அமைச்சர் ரிஷாட் வலியுறுத்து

New Zealand names squad for Sri Lanka Tests

வவுனியா பள்ளிக்கடைகளை தீக்கிரையாக்கிய சூத்திரதாரிகளை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தவும்-அமைச்சர் ரிஷாட்