வகைப்படுத்தப்படாத

கிளிநொச்சியின் இயல்பு நிலையும் பாதிப்பு

(UDHAYAM, COLOMBO) – வடக்கு மாகாண முதலமைச்சர் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வடக்கில் மேற்கொள்ளப்பட்ட ஹர்தால் காரணமாக கிளிநொச்சியின் இயல்பு நிலையும் பாதிக்கப்பட்டிருந்தது.

கிளிநொச்சியில் பெரும்பாலான வியாபார நிலையங்கள் பூட்டப்பட்டிருந்ததோடு போக்குவரத்து சேவைகளும் வழமை போன்று இடம்பெறவில்லை. மேலும் பாடசாலைகளுக்கும் மாணவா;களின் வரவு மிகவும் குறைவாக காணப்பட்டமையினால் கல்விச் செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டிருந்தது.

அரச திணைக்களங்களிலும் உத்தியோகத்தர்களின் வரவு குறைவாக காணப்பட்டமையும் காணக் கூடியதாக இருந்தது.

Related posts

க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் விசேட ஒரு நாள் சேவை

தேர்தல் கடமைக்காகச் சென்ற வாகனம் விபத்து

தவளை போல் கட்சியை விட்டு பாய்பவர்களுக்கு எச்சரிக்கை

editor