உள்நாடு

மருத்துவ துறையில் முதலிடம், உயிரியல் முறைமைகள் தொழில்நுட்பத்தில் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலைகளை பெற்றது கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி!

இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தினால் வெளியீடு செய்யப்பட்ட க.பொ.த (உ/த) பரீட்சை (2024) பெறுபேறுகளின் படி கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) யில் மாவட்ட ரீதியாக மருத்துவ துறையில் முதலாம் மற்றும் நான்காம் இடங்களையும், உயிரியல் முறைமைகள் தொழில்நுட்பத்தில் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலைகளை பெற்று சாதித்துள்ளது.

அத்துடன் வெளியீடு செய்யப்பட்ட க.பொ.த (உ/த) பரீட்சை (2024) பெறுபேறுகளின் படி கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மருத்துவ பீடத்துக்கு 10 மாணவிகளும், பொறியியல் பீடத்துக்கு 03 மாணவிகளும், உயிரியல் முறைமைகள் தொழில்நுட்பம் 16 மாணவிகளும், வர்த்தக பீடத்துக்கு 12 மாணவிகளும், முகாமைத்துவ பீடத்துக்கு 08 மாணவிகளும் கலை கலாசார பீடத்துக்கு 48 மாணவிகள்  மற்றும் ஏனைய பீடங்கள் உள்ளடங்களாக சிறந்த சித்திகளைப் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

க.பொ.த உயர்தர பரீட்சையில் சித்தி பெற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவிகளுக்கும் பாடசாலைக்கு அதி சிறப்புச் சித்திகளை பெற்று பெருமை சேர்த்த மாணவிகளுக்கும், சிறந்த பெறுபேறுகளைப் பெறுவதற்கு பல்வேறு நெருக்கடியான சூழ்நிலையிகளில் அனைத்து வழிகளிலும் வழிகாட்டியாக இருந்து செயற்பட்ட கல்லூரி முதல்வர் ஏ.பி. நஸ்மியா சனூஸ் (SLEAS), பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், பகுதித் தலைவர்கள், வகுப்பாசிரியர்கள், பாட ஆசிரியர்கள், மேலதிக கருத்தரங்குகள் கற்பித்த ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு உறுப்பினர்கள், பழைய மாணவிகள் சங்க உறுப்பினர்கள் மற்றும் நலன் விரும்பிகள், பெற்றோர்கள் அனைவருக்கும் பாடசாலை சமூகம் சார்பாக  நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்ளப்பட்டுள்ளது.

-நூருல் ஹுதா உமர்

Related posts

புதிய கொரோனா வைரஸ் : எதிராக விஷேட நடவடிக்கை

கம்பஹாவிற்கு 8 மணிநேர நீர் வெட்டு

ஜனாதிபதிக்கு அநுரகுமார திஸாநாயக்க கடிதம்