உள்நாடுபிராந்தியம்

ஹிக்கடுவ பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு – இருவர் வைத்தியசாலையில்

ஹிக்கடுவ – குமாரகந்த பகுதியில் இன்று (3) இரவு 7 மணியளவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

வீதிக்கு அருகில் உள்ள ஒரு கடையில் காத்திருந்த ஒரு பெண் மற்றும் ஆணொருவரை இலக்கு வைத்து மேற்படி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த நபரொருவரே இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

தனியார் பேருந்து ஊழியர்களுக்கு எதிராக சட்டம் அமுலுக்கு

உலக வங்கியிடம் இருந்து 150 மில்லியன் டொலர்!

“இன்றும் போராட்டத்தில் ஈடுபடவுள்ள ஆசிரியர், அதிபர்கள்” ​