அரசியல்உள்நாடு

நாமல் எம்.பி யின் சட்டமாணி பட்டம் – CID யின் விசாரணைகள் ஆரம்பம்!

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நாமல் ராஜபக்ஷவின் சட்டமாணி பட்டத்தை பெற்றுக்கொள்வதற்கு முறைக்கேடான வகையில் பரீட்சைக்கு தோற்றினார் என்ற குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

இலங்கை சட்டக் கல்லூரியின் பரீட்சையின் போது நாமல் ராஜபக்ஷ மோசடியில் ஈடுபட்டதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் இருப்பதாகவும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

இதனை கருத்தில் கொண்ட கொழும்பு நீதவான் தனுஜா லக்மாலி, இது தொடர்பான முன்னேற்ற அறிக்கையை விரைவில் நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Related posts

இராஜினாமா கடிதத்தில் ஜனாதிபதி கையெழுத்திட்டார்

இஸ்லாமிய மத நூல்கள் இறக்குமதிக்கு தடை எதுவுமில்லை – பிரதியமைச்சர் அருண ஜயசேகர

editor

ஆனைவிழுந்தான் – ஐவரடங்கிய குழுவின் அறிக்கை சமர்ப்பிப்பு