அரசியல்உள்நாடு

தொடர்ச்சியாக தேர்தல்களை நடத்த முடியாது – அபிவிருத்தித் திட்டங்களையும் செயல்படுத்த வேண்டும் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுடன் கடந்த ஆறு மாதங்களுக்குள் மூன்று தேர்தல்கள் நடத்தப்பட்டதால், இந்த ஆண்டு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படமாட்டாது என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

பாணந்துறையில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கூட்டத்தில் உரையாற்றும்போது இதனை தெரிவித்த அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசாங்கம் தொடர்ச்சியாக தேர்தல்களை நடத்த முடியாது. நாட்டின் அபிவிருத்தித் திட்டங்களையும் செயற்படுத்த வேண்டும்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குப் பின்னர், தேர்தல் நடவடிக்கைகள் நிறைவடையும்.

மாகாண சபைத் தேர்தல்கள் மட்டுமே நடத்தப்படவுள்ளன.

சில சட்டங்கள் மாற்ற அளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாலும், இந்த ஆண்டு மாகாண சபைத் நடத்தப்பட மாட்டாது என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related posts

கொரியாவில் உள்ள இலங்கையர்கள் தொடர்பு கொள்வதற்கு அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்

ஸ்ரீ லங்கா கிரிக்கட் தொடர்பான விவாதம் நாளை!

ஜனாதிபதியின் செயலாளருக்கும் ஐக்கிய அரபு இராஜ்ஜிய (UAE) தூதுவருக்கும் இடையில் சந்திப்பு

editor