அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு நாளை (14) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

அதன்படி, சம்பந்தப்பட்ட தீர்மானம் தொடர்பான விவாதம் எதிர்வரும் திங்கட்கிழமை (17) பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.

தொடர்புடைய தீர்மானம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால், மறுதினமே தேர்தல் ஆணைக்குழு வேட்புமனுக்களை ஏற்பதற்கான அதிகாரத்தை பெறும்.

அதன்படி, குறைந்தபட்ச நாட்களுக்குள் தேர்தல் அறிவிக்கப்பட்டால், ஏப்ரல் 11 ஆம் திகதி தேர்தலை நடத்த முடியும். ஆனால் அந்த திகதியில் தேர்தலை நடத்துவதில் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன.

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு 340 வகையான வாக்குச் சீட்டுகள் அச்சிடப்பட வேண்டும் என்பதோடு, இதற்கான காலமும் போதுமானதாக இல்லை.

மேலும், சித்திரைப் புத்தாண்டு காரணமாக ஏப்ரல் 11 ஆம் திகதி தேர்தலை நடத்துவதில் நடைமுறை சிக்கல்கள் காணப்படுகின்றன.

இந்த சூழ்நிலையில், உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த தேர்தல் ஆணைக்குழு அதிகபட்ச நாட்களைப் பயன்படுத்தும்.

அப்படி நடந்தால், தேர்தல் ஏப்ரல் மாதம் 20 முதல் 30ஆம் திகதிக்குள் நடைபெறும்.

அதன்படி, இதற்கு மிகவும் பொருத்தமான திகதி ஏப்ரல் 22 அல்லது 25 ஆகும்.

Related posts

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சின் கடமைகளை பொறுபேற்றார்

ஐ.நாவில் முழங்கிய முஸ்லிம்களின் உரிமைக்குரல்கள் ஆவணப்படமும் வெளியிடப்பட்டது

ஸ்ரீலங்கன் விமான சேவைக்காக 11 விமானங்கள்