உள்நாடு

இலங்கைக்கான ஜப்பான் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகரை கடற்படைத் தளபதி சந்தித்தார்

இலங்கையிலுள்ள ஜப்பான் தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றும் கெப்டன் YUKI YOKOHARI, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவை இன்று (07) உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.

இந்த உத்தியோகபூர்வ சந்திப்பில், இலங்கைக்கான ஜப்பானிய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகரால் 26ஆவது கடற்படைத் தளபதியாகப் பொறுப்பேற்ற வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவை வாழ்த்திய பின்னர், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு உள்ளிட்ட இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பில் சிநேகபூர்வ கலந்துரையாடலில் இருவரும் ஈடுபட்டனர்.

Related posts

பெல்ஜியத்தில் இருந்த 43 பேர் நாடு திரும்பினர்

சமந்தா பவர் இலங்கைக்கு

பாடசாலைகள் மீள ஆரம்பிப்பது தொடர்பிலான முக்கிய தீர்மானம்