உள்நாடுபிராந்தியம்

முக்கொலை சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சரின் ஒருங்கிணைப்பு அதிகாரி கைது

காலி, ஹினிதும, மகாபோதிவத்த பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் இடம்பெற்ற முக்கொலை சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சரின் ஒருங்கிணைப்பு அதிகாரி ஒருவரை பொலிசார் இன்று (04) கைது செய்துள்ளனர்.

சந்தேக நபரிடம் தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலி ஹினிதும மஹாபோதிவத்த பகுதியில் கடந்த 30 ஆம் திகதி இரவு 11.15 மணியளவில் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரியால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேரில் ஒருவர் T56 துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக பொலிசார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூடு நடந்த நேரத்தில் ஐந்து பேர் விடுதியில் மது அருந்திக் கொண்டிருந்தனர், அவர்களில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

துப்பாக்கிச் சூடு நடந்த நேரத்தில் மற்ற இருவரும் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதாக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த துப்பாக்கிச் சூட்டில் விடுதியின் உரிமையாளரான இந்துனில் சமன் குமார (வயது 55) மற்றும் அம்பலாங்கொடையைச் சேர்ந்த எம். நெவில் மற்றும் ஹினிதும பகுதியைச் சேர்ந்த 34 வயதான சத்துரங்க குமார என்ற மூன்று நபர்கள் கொல்லப்பட்டிருந்தனர்.

கொலை செய்யப்பட்ட மூன்று நபர்களுக்கும் பாதாள உலகத்துடன் எந்த தொடர்பும் இல்லை என்றும் பொலிசார் தெரிவித்தனர்.

Related posts

20 இற்கு எதிராக முதல் மனுத்தாக்கல்

நம்பர் முதல் மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை

நாட்டில் நிலையான இயக்க நடைமுறையை மேம்படுத்த நடவடிக்கை – அலி சப்ரி