அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

யோஷித ராஜபக்ஷ தொடர்பில் பல முக்கிய தகவல்களை வெளியிட்ட நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

யோஷித ராஜபக்ஷவுக்கு பிணை வழங்கப்பட்டமை குறித்து நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இன்று (27) விளக்கமளித்தார்.

குறித்த வழக்கில் யோஷித ராஜபக்ஷ இதுவரை சந்தேக நபராகப் பெயரிடப்படவில்லை என்று நீதி அமைச்சர் தெரிவித்தார்.

“யோஷித ராஜபக்ஷ தொடர்புபட்டுள்ள குறித்த பணமோசடி சம்பவம் சுமார் 8 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. இதுவரை, யோஷித இந்த வழக்கில் சந்தேக நபராகப் பெயரிடப்படவில்லை.

உயர் நீதிமன்றத்தில் ஒரு நபருக்கு குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்பு, சந்தேக நபராக அவரிடமிருந்து வாக்குமூலம் பெறுவது அவசியம்.

வாக்குமூலம் பெறுவதற்காக இந்த நபரை சந்தேக நபராக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சட்டமா அதிபர் பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அதுதான் வழக்கமான நடைமுறை. பிணை சட்டத்தின் விதிகளின்படி, அவர் விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்காவிட்டால் அல்லது நாட்டை விட்டு தப்பிச் செல்லாவிட்டால் பிணை வழங்குவது இயல்பானது.

“யோஷிதவுக்கு எதிராக பணமோசடி வழக்கு தொடரப்பட்டதால், தேவையான நடைமுறையின் ஒரு பகுதியாக இந்த கைது இடம்பெற்றது. பிணை வழங்கப்படுவதால் அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவார் என்று அர்த்தமல்ல.”

Related posts

அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்

சேதனப் பசளை தயாரிக்கும் விவசாயிகளுக்கு கொடுப்பனவு

ஆறு பேருக்கு மரண தண்டனை