உலகம்

மியான்மரில் நிலநடுக்கம் – ரிக்டரில் 4.8 ஆக பதிவு

மியான்மரில் இன்று (24) அதிகாலை 12.53 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

மியான்மர் நாட்டில், இந்தியாவின் மணிப்பூர் எல்லையையொட்டிய பகுதியில் இன்று அதிகாலை 12.53 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

இது ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவாகி இருந்தது.

இந்நிலநடுக்கம் 106 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது.

இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.

Related posts

தென் கொரிய ஜனாதிபதி பதவி நீக்கம் – 60 நாட்களுக்குள் தேர்தல்

editor

உலகின் மிக சக்தி வாய்ந்த ஆயுதம்

உலகளவில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 80 இலட்சத்தை கடந்தது