அரசியல்உள்நாடு

எல்பிட்டிய தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று (14) இடம்பெறவுள்ளது.

இன்று தபால் மூலம் வாக்களிக்க முடியாத வாக்காளர்களுக்கு எதிர்வரும் 18ஆம் திகதி அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக 10 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் 02 சுயேட்சைக் குழுக்களும் கட்டுப்பணம் செலுத்திய போதும் அவற்றில், அங்கீகரிக்கப்பட்ட 08 அரசியல் கட்சிகளும் ஒரு சுயேச்சைக் குழுவும் மாத்திரமே தமது வேட்புமனுக்களை சமர்ப்பித்திருந்தன.

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ளது.

Related posts

மத்திய வங்கியின் ஆளுநரின் பதவிக் காலம் நீடிக்குமா?

இருபது : சர்வஜன வாக்கெடுப்புத் திருத்தங்கள் உள்ளடக்கப்பட மாட்டாது

பிரியந்த குமாரவின் குடும்பத்துக்கு 2.5 மில்லியன் நன்கொடை