அரசியல்உள்நாடு

பாராளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டி – ஈழவர் ஜனநாயக முன்னணி அறிவிப்பு

எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் ஈழவர் ஜனநாயக முன்னணி வடகிழக்கில் தனித்து போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.

ஈழவர் ஜனநாயக முன்னணியின் செயற்குழு கூட்டம் வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள கட்சியின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது.

அதன்பின்னர், இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே கட்சியின் செயலாளர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்…..

தென்பகுதி மக்கள் தமக்குரிய தலைமையினை தெரிவு செய்துள்ளனர்.

கடந்த காலங்களில் தமிழ்த் தேசியம் என்ற நிலைமையினை தக்க வைத்து தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டியிருந்தமையால் நாம் அரசியலில் தீவிரமாக ஈடுபடவில்லை.

இன்று தமிழ்த் தேசியம் சீரழிந்து சிதறடிக்கப்பட்டு மக்கள் கலங்கிய குளத்தில் நீந்துகின்ற மீன்களாக உள்ளனர்.

பல்வேறு சக்திகளாலும் எமது மக்களின் வாக்குகள் கவரப்படுகின்ற பரிதாப நிலை இன்று ஏற்ப்பட்டுள்ளது.

எனவே மக்கள் அனைவரும் ஒரே அணியாக திரண்டு ஈரோஸ் அமைப்பினூடாக போட்டியிடும் பிரதிநிதிகளை தெரிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.

குறித்த ஊடக சந்திப்பில் கட்சியின் செயலாளர் எ.இ.ராசநாயகம் மற்றும் தலைவர் துஸ்யந்தன், கட்சியின் முக்கியஸ்த்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

Related posts

ஜனாதிபதி விடுத்துள்ள முக்கிய பணிப்புரை

அனைத்து வணிகப் பொருட்களுக்கும் புதிய சட்டம்

எதிர்வரும் 14 நாட்களுக்கு தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட தடையுத்தரவு