வகைப்படுத்தப்படாத

நாளை கொழும்பில் 18 மணி நேர நீர் விநியோகத் தடை

(UDHAYAM, COLOMBO) – நாளை காலை 10.00 மணி முதல் 18 மணிநேரம் கொழும்பு – 1, கொழும்பு – 2 ஆகிய பிரதேசங்களில் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக நீர்வழங்கல் வடிகால் அமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கை காரணமாக இவ்வாறு நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு அந்த சபை குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, அக் காலப்பகுதியில் கொழும்பு 8 மற்றும் கொழும்பு 10 ஆகிய பிரதேசங்களில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படும் என அந்த சபை மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

இலங்கைக்கு உதவ பல நாடுகள் முன்வந்துள்ளன

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையில் புதிய அரசாங்கம்

The final report of the select committee probing the Easter Sunday Attack to be released on 23rd of August