உள்நாடு

தெற்கு அதிவேக வீதியில் கடுவலை – பியகம இடைமாற்றத்தின் கடவத்தை வரையான பகுதி மூடப்படுகிறது

தெற்கு அதிவேக வீதியில் கடுவலை – பியகம இடைமாற்றத்தின் கடவத்தை வரையான பகுதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

களனி ஆற்றின் நீர் மட்டம் அதிகரிப்பதன் காரணமாக இந்த இடமாற்றப் பாதை முற்றாக மூடப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக கடுவலையிலிருந்து மாத்தறை நோக்கி வாகனங்கள் உட்செல்லவும் வெளியேறவும் முடியாத நிலை காணப்படுகின்றது.

மேலும், கடவத்தையிலிருந்து கடுவலை நோக்கி வாகனங்கள் உட்செல்லவும் வெளியேறவும் முடியாத நிலை காணப்படுவதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

 

Related posts

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் தீவிர விசாரணை – ஜனாதிபதி அநுர உறுதி

editor

கிழக்கு மாகாணத்தில் சோலார் பேனல்களை நிறுவுவதற்கு – மின்சக்தி அமைச்சர் இணக்கம்!

மேலும் சில குழுவினருக்கு PCR பரிசோதனை