உள்நாடு

ரணிலுக்கு நாமல் விடுத்துள்ள எச்சரிக்கை

கொழும்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் பலமான ஒருவருடன் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கலந்துரையாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் முதலில் நடத்தப்பட்டாலும், பொதுஜன பெரமுன அதனை ஆதரித்தாலும் ரணில் விக்ரமசிங்கவால் வெற்றிபெற முடியாது என நாமல் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே முதலில் பொதுத் தேர்தலை நடத்துவதன் மூலம் ஐக்கிய தேசியக் கட்சியும் பொது ஜன பெரமுனவும் ஏனைய கட்சிகளுடன் இணைந்து போட்டியிட முடியும்.

சிறுபான்பான்மை கட்சிகள்
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி கதிரையில் இருந்தால் பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆட்சி அமைக்க போதிய ஆசனங்கள் கிடைக்காது.

இந்நிலையில் தமிழ், முஸ்லிம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களையோ அல்லது ஐக்கிய மக்கள் சக்தி கட்சி உறுப்பினர்களையே ஒன்று திரட்டி அதனை செய்ய முடியும் என நாமல் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

சிங்கப்பூரில் இருந்த 291 பேர் நாடு திரும்பினர்

ஜோன்ஸ்டனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

முதலாவது ‘Sky bridge” சொகுசு ஹோட்டலை திறந்த ஜனாதிபதி