உள்நாடு

மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தில் நம்பிக்கை இல்லை – தயாசிறி ஜயசேகர

(UTV | கொழும்பு) –

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ள புதிய கூட்டணி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக தான் அறிவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

மேலும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் உருவாக்கப்பட்ட கூட்டணிகள் மீது எந்த ஓர் அரசியல் கட்சிக்கும் நம்பிக்கை இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தில் பலருக்கு நம்பிக்கை இல்லை. கடந்த வாரம் நிமல் லான்சா நடத்திய கூட்டத்தைப் பார்த்தேன், அவர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கப் போவதை நான் கவனித்தேன் என்றும் அவர் தெரிவித்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இலங்கை முதலீட்டு சபைக்கு கோப் குழுவினால் அழைப்பு

சிறிய செயற்திட்டங்கள் ஊடாக பாரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் – வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு

பெற்றோல் விலை அதிகரிப்பு!!