உள்நாடு

தமிழரசு கட்சியின் புதிய தலைவர் யார் ? தெரிவு இன்று

(UTV | கொழும்பு) –

தமிழரசு கட்சியின் புதிய தலைவரை தெரிவு செய்வதற்காக இரகசிய வாக்கெடுப்பு திருகோணமலை நகர மண்டபத்தில் இன்று காலை இடம்பெறவுள்ளது.குறித்த வாக்கெடுப்பில், இலங்கை தமிழரசு கட்சியின் பொது சபை உறுப்பினர்கள் 340 பேரும் வாக்களிக்கவுள்ளனர்.

இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் பதவிக்காக பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் ஸ்ரீதரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீனிதம்பி யோகேஸ்வரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இந்தநிலையில், இன்று இடம்பெறும் இரகசிய வாக்கெடுப்பின் முடிகளுக்கமைய தெரிவாகும் புதிய தலைவர் எதிர்வரும் 28ஆம் திகதி இடம்பெறும் கட்சியின் தேசிய மாநாட்டின் போது உத்தியோகபூர்வமாக தமது கடமைகளை பொறுப்பேற்பார் என இலங்கை தமிழரசு கட்சி செயலாளர் பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

வளமான நாட்டை கட்டியெழுப்பும் வகையில் புத்தாண்டு அமையட்டும்

ஜனாதிபதித் தேர்தல் முறைப்பாடுகள் 1482 ஆக அதிகரிப்பு

editor

மெனிங் சந்தை : குலுக்கல் முறையில் வர்த்தகர்களைத் தெரிவு