உலகம்

நேபாள பேருந்து விபத்தில் பலர் பலி!

(UTV | கொழும்பு) –

நேபாளத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் இரண்டு இந்தியர்கள் உள்ளிட்ட 12 பேர் உயிரிழந்தனர். நேபாள நாட்டின் டாங் மாவட்டம் நேபாள் கஞ்சில் இருந்து காத்மாண்டு நோக்கி பேருந்து ஒன்று சென்று பயணித்துக்கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த அந்த பேருந்து பாலத்தில் இருந்து ராப்தி என்ற ஆற்றுக்குள் கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் 2 இந்தியர்கள் உள்ளிட்ட 12 பேர் உயிரிழந்தனர்.

மேலும் 22 பேர் படுகாயமடைந்துள்ளனர்.பலியானவர்களில் 8 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் இந்தியா பீகாரை சேர்ந்த 67 வயதான ஒருவரும், உத்தர பிரதேசத்தை சேர்ந்த 37 வயதான ஒருவரும் அடங்கியுள்ளனர். இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த அந்த நாட்டின் பொலிஸார் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு நேபாள் கஞ்சில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மேலும் பொலிஸார், இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து பற்றி வழக்கு பதிவு செய்த பொலிஸார் பேருந்துன் சாரதியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இரண்டு வாரங்களுக்கு சர்வதேச விமானப் பயணங்கள் ரத்து

பிலிப்பைன்ஸை தாக்கிய புயல் – 16 பேர் பலி

காசாவை விட்டு 263,000க்கும் அதிகமான மக்கள் வெளியேற்றம்!