சூடான செய்திகள் 1

மில்கோ தலைவர் இராஜினாமா!

(UTV | கொழும்பு) –

மில்கோ நிறுவனத்தின் தற்போதைய தலைவர் ரேணுக பெரேரா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

நிதியமைச்சின் செயலாளருக்கு இன்று கடிதம் ஒன்றை அனுப்பி அவர் இதனை அறிவித்துள்ளார். 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21 ஆம் திகதி முதல், ரேணுக பெரேரா மில்கோ நிறுவனத்தின் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.

அரசின் கொள்கை முடிவின்படி மில்கோ நிறுவனத்தை தனியார் மயமாக்கும் பணியை உள்ளூர் நிறுவனமும், இந்திய நிறுவனமும் இணைந்து தொடங்கியுள்ளனர் இந்த பின்னணியில், தனது சேவைக் காலம் இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், நிறுவனத்தை மேலும் முன்னேற்றுவதற்கு தனது நேரத்தை செலவிடுவது பயனளிக்காத காரணத்தினால் பதவி விலக தீர்மானித்துள்ளதாக ரேணுக பெரேரா, நிதியமைச்சின் செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அமித் வீரசிங்கவின் மனைவி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

எதிர்வரும் ஒரு வார காலம் மிகவும் கடுமையானதாக இருக்கும் – அனில் ஜாசிங்க

தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் பயன்படுத்திய 1800 தொலைபேசி அழைப்புக்கள் தொடர்பில் விசாரணை