உள்நாடு

வலுப்பெறும் போராட்டங்கள் எச்சரிக்கும் எதிர் கட்சி!

(UTV | கொழும்பு) –

கோட்­டா­பய ராஜபக்ஷ அர­சாங்­கத்­துக்கு எதி­ரான மக்கள் போராட்டம் இடம்­பெற்று, கிட்­டத்­தட்ட ஒன்­றரை வரு­டங்­க­ளுக்குப் பின்னர், இன்­னொரு மக்கள் போராட்­டத்­துக்­கான சாத்­தியம் அதி­க­ரிக்கத் தொடங்­கி­யி­ருக்­கின்­றது. கோட்­டா­பய ராஜபக்ஷ ஆட்­சியில் மக்கள் எதிர்­கொண்­டதைப் போன்ற நெருக்­க­டிகள் மீண்டும் உரு­வாகத் தொடங்­கி­யி­ருக்­கின்­றன. பொரு­ளா­தார ரீதி­யாக கொடுக்­கப்­ப­டு­கின்ற அழுத்­தங்கள், எப்­போ­துமே மக்­களை உணர்வு ரீதி­யான நிலைக்கு கொண்டு செல்லக் கூடி­யவை. அவ்­வா­றான பொரு­ளா­தார அழுத்­தங்கள் மீண்டும் உரு­வாகத் தொடங்­கி­யி­ருப்­பது ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் அர­சாங்­கத்தைப் பொறுத்­த­வ­ரையில் பாத­க­மா­னது.

ஒரு பக்கம் பொரு­ளா­தார மீட்சி பற்றி வீர வச­னங்­களைப் பேசிக் கொண்டே மக்­களைச் சுரண்டும் நட­வ­டிக்­கைகள் தீவி­ர­ம­டைந்­தி­ருக்­கின்­றன.ஊழ­லையும், மோச­டி­க­ளையும் தடுக்கக் கூடிய ஆற்­றலை ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் அவ­ரது அர­சாங்­கமும் கொண்­டி­ருக்­க­வில்லை என்­பது இப்­போது நிரூ­ப­ண­மாகி வரு­கி­றது. சீனிக்­கான பண்­டக வரி உயர்த்­தப்­ப­டு­வ­தற்கு முன்­னரே, அந்த தகவல் கசிந்து வர்த்­தகர் ஒரு­வரால் பெருந்­தொகை சீனி இறக்­கு­மதி செய்­யப்­பட்­டமை அதில் ஒன்று. இதே­ போன்­ற­தொரு மோசடி கோட்­டா­பய  ராஜபக்ஷவின் காலத்­திலும் இடம்­பெற்­றது.  இரண்டு மோச­டி­க­ளாலும் அர­சாங்கம்  ஆயி­ரக்­க­ணக்­கான கோடி ரூபாய்­களை இழந்­தி­ருக்­கி­றது. கிரிக்கெட் சபையில்  (ஸ்ரீலங்கா கிரிக்கெட்) இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் ஊழல் மோச­டிகள், இன்று நாட்டைச் சந்தி சிரிக்கும் நிலைக்கு கொண்டு வந்­தி­ருக்­கின்­றன.

ஜனா­தி­பதி மோச­டி­யா­ளர்­களைக் காப்­பாற்ற முனை­கிறார் என்று விளை­யாட்டுத்துறை அமைச்­சரே  பாரா­ளு­மன்­றத்தில் கூறு­கிறார். மோச­டி­யா­ளர்­களைப் பாது­காப்­பவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க என்ற குற்­றச்­சாட்டு இன்று நேற்று ஏற்­பட்­ட­தல்ல. நல்­லாட்சி அர­சாங்­கத்தின் காலத்தில் மத்­திய வங்கி பிணை முறி மோச­டியில் ஈடு­பட்­ட­தாக குற்­றம்­சாட்­டப்­பட்ட அர்­ஜுன மகேந்­திரன் உள்­ளிட்­ட­வர்­களை தப்­பிக்க விட்­டவர் ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க தான் என்ற குற்­றச்­சாட்டு உள்­ளது.ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் நிழலில் தான் அத்­தனை ஊழல் மோச­டி­களும் இடம்­பெற்­றன. அவர் இந்த மோச­டி­களில் தொடர்­பு­பட்டார் என எந்த ஆதா­ரங்­களும் இல்­லா­விட்­டாலும், மோச­டி­யா­ளர்கள் அவரைப் பயன்­ப­டுத்திக் கொண்­டனர். இப்­போதும் அதுவே நடந்து கொண்­டி­ருப்­ப­தாகத் தெரி­கி­றது.

ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்­யப்­பட்ட பின்னர் எடுக்­கின்ற பல முடி­வுகள் அவ­ருக்கே குழி பறிப்­ப­தாகத் தான் அமைந்­தி­ருக்­கி­றது. பொலிஸ் மா அதி­ப­ருக்கு சேவை நீடிப்பு வழங்­கி­யது சட்­ட­வி­ரோதம் என்றும், இதனை கார­ண­மாக வைத்து அவ­ருக்கு எதி­ராக குற்ற விசா­ரணைப் பிரே­ர­ணையைக் கொண்டு வர முடியும் என்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுமந்­திரன் கூறி­யி­ருக்­கிறார்.அவர் பத­வியில் இல்­லாத போதும், அர­சி­ய­ல­மைப்பை மீறி­ய­தற்­காக நீதி­மன்­றத்தில் நிறுத்­தப்­படும் நிலை ஏற்­ப­டலாம் என்றும் கூறப்­ப­டு­கி­றது.மக்கள் மத்­தியில் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அர­சாங்கம் வேக­மாக செல்­வாக்­கி­ழந்து வரு­கி­றது. இந்த செல்­வாக்கு வீழ்ச்சி தான் பஷில்  ராஜபக் ஷவை பொது­ஜன பெர­மு­னவின் வேட்­பா­ள­ராக முன்­னி­றுத்தும் தீர்­மா­னத்தை அந்தக் கட்­சி­யினர் எடுக்கும் நிலைக்கு வந்­தி­ருப்­ப­தற்கு முக்­கி­ய­மான காரணம்.

ரணில் விக்­கி­ர­ம­சிங்க தனது பத­விக்­கா­லத்தில் நற்­பெ­யரைச் சம்­பா­தித்­தி­ருந்தால், அவ­ருக்கு எதி­ராக போட்­டி­யி­டு­வ­தற்கு ராஜபக் ஷவி­னரில் எவ­ரேனும் தயங்­கி­யி­ருப்­பார்கள். அந்­த­நிலை இப்­போது மாறி, ராஜபக் ஷவி­ன­ருக்கு சார்­பான சூழல் உரு­வாகத் தொடங்­கி­யி­ருக்­கி­றது. வர­வு­,செ­லவுத் திட்­டத்­துக்குப் பின்னர் அர­சாங்­கத்­துடன் அவர்கள் எந்­த­ள­வுக்கும் முரண்­பாட்டை ஏற்­ப­டுத்திக் கொள்­ளலாம். எந்த மக்கள் தமக்கு எதி­ராக போராட்­டங்­களை நடத்­தி­னரோ அதே மக்கள் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அர­சாங்­கத்­துக்கு எதி­ராக திரும்­பு­வார்கள் என்று ராஜபக் ஷவினர் பார்த்துக் கொண்­டி­ருக்­கி­றார்கள். நெருக்­க­டி­க­ளுக்கு மேல் நெருக்­கடி அதி­க­ரிக்கும் போது மீண்டும் போராட்­டங்கள் வெடிக்கும். தற்­போதே ஆங்­காங்கே தொழிற்­சங்­கங்கள் போராட்­டங்­களை நடத்த தொடங்கி விட்­டன.

அர­சாங்கம் உரு­வாக்கி வரும் புதிய சட்­டங்கள் மனித உரி­மைகள், ஜன­நா­யகம் போன்­ற­வற்றை நசுக்கும் ஆபத்து உள்­ள­தாக எதிர்க்­கட்­சி­யினர் எச்­ச­ரிக்­கின்­றனர்.புதிய சட்­டங்­களின் ஊடாக அர­சாங்கம் மக்­களை கட்­டுப்­ப­டுத்த முனையும் போது அர­சாங்­கத்­துக்கு எதி­ரான மக்­களின் போராட்­டங்கள் தீவிரம் பெறும்.அண்­மையில் கொழும்பில் நடந்த கருத்­த­ரங்கில் உரை­யாற்­றிய பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுமந்­திரன், மக்­க­ளாணை இல்­லாத அர­சாங்­கத்தின் தவ­றான பொரு­ளா­தார முகா­மைத்­து­வத்­துக்கு எதி­ராக மக்கள் சட்­ட­ரீ­தி­யான கட்­டுப்­பா­டு­களை மீறி ஒன்று திரளத் தயா­ராக வேண்டும் என்று அழைப்பு விடுத்­தி­ருக்­கிறார்.

“ஆர்ப்­பாட்­டங்கள் மூலம் தனி­ந­பர்கள் தமது அதி­ருப்­தியை வெளிப்­ப­டுத்­து­வது மிகவும் அவ­சி­ய­மா­னது. மக்கள் தங்கள் போராட்­டத்தை முன்­னெப்­போ­தையும் விட அதி­க­மாக வெளிப்­ப­டுத்த வேண்­டிய நேரம் இது” என்றும் அவர் கூறி­யி­ருக்­கிறார்.அது­போல அமெ­ரிக்­காவில் நடந்த நிகழ்வு ஒன்றில் உரை­யாற்­றிய தேசிய மக்கள் சக்­தியின் தலைவர் அனு­ர­கு­மார திச­நா­யக்க, 2024 ஒக்டோபர் 24ஆம் திக­திக்கு முன்னர் ஜனா­தி­பதி தேர்தல் நடத்­தப்­ப­டாது போனால் மக்கள் வீதியில் இறங்­கு­வார்கள் என்று எச்­ச­ரித்­தி­ருக்­கிறார்.மக்கள் வீதியில் இறங்கிப் போராட வேண்­டி­ய­தொரு சூழல் இலங்­கையில் உரு­வாகி வரு­கி­றது என்­பதைத் தான் இந்த இரண்டு பேரி­னது கருத்­துக்­களும் வெளிப்­ப­டுத்­து­கின்­றன. பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுமந்­திரன், தமிழ் தேச அர­சி­யல்­வா­தி­க­ளுக்­குள்­ளேயே அதிக மித­வாதி எனப் பெய­ரெ­டுத்­தவர். அவரே, இன்று மக்­களை கொதித்­தெ­ழுந்து வீதிக்கு வர வேண்டும் என்­கிறார்.

நடை­மு­றையில் உள்ள சட்­டங்­களை மீறி அவர்கள் போராட வேண்டும் என்­கிறார். இது ரணில் விக்­கி­ர­ம­சிங்க அர­சாங்­கத்தின் மீதுள்ள அவ­ரது அதி­ருப்தி மாத்­தி­ர­மல்ல, போராட்­டங்கள் தொடர்­பாக அவர் முன்னர் கொண்­டி­ருந்த கருத்தில் ஏற்­பட்டு வரும் மாற்­றமும் கூட.

மென்­போக்­கா­ளர்கள் என்று அடை­யா­ளப்­ப­டுத்திக் கொண்­ட­வர்கள் கூட இன்று போராட்­டங்­க­ளுக்கு மக்­களை அழைக்­கின்ற நிலைக்கு கொண்டு வந்து நிறுத்­தி­யி­ருக்­கி­றது அர­சாங்கம். ஜே.வி.பியின் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் லால் காந்த அண்­மையில் கண்­டியில் நடந்த கூட்டம் ஒன்றில் உரை­யாற்­றிய போது, தேவைப்­பட்டால் மீண்டும் ஆயுதம் ஏந்­து­வ­தற்கும் தயா­ராக இருக்­கிறேன் என்று குறிப்­பிட்­டி­ருக்­கிறார். இவை­யெல்­லா­வற்­றுக்கும் காரணம் ஜன­நா­ய­கத்தின் மீதான நம்­பிக்கை தளர்ந்து வரு­வது தான். ஜன­நா­யகம் பல­மா­ன­தாக இருந்தால், அவ்­வா­றான அர­சியல் வழி­மு­றையை முன்­னெ­டுப்­பதில் கட்­சி­களும், பிர­தி­நி­தி­களும் தயா­ராக இருப்­பார்கள். ஜன­நா­யகம் பல­வீ­ன­ம­டைந்து, அடக்­கு­மு­றை­களும், எதேச்­சா­தி­கா­ரமும் அதி­க­ரிக்கும் போது, ஜன­நா­ய­கத்தை நம்பியிருப்பவர்கள் அதிகபட்ச ஏமாற்றத்துக்கு உள்ளாகிறார்கள்.

ஆயுதப் போராட்டத்தில் இருந்து விலகிய லால்காந்த இன்று மீண்டும் ஆயுதம் ஏந்த தயார் என்கிறார் என்றால், அரசியல் வழி மீதான அவரது நம்பிக்கைகள் பொய்த்து விட்டன என்று தான் அர்த்தம். சுமந்திரன் கூட மக்களை வீதிக்கு இறங்குமாறு அழைக்கிறார் என்றால், அரசாங்கத்துடன் பேசி தீர்வுகளைப் பெறலாம் என்ற நம்பிக்கையை அவர் இழந்து விட்டார் என்று தான் அர்த்தம். எல்லா மட்டங்களிலும் இந்தநிலை உருவாகி விட்டது. இது தான் அரச எதிர்ப்பு போராட்டங்கள் தீவிரமடைவதற்கான முகிழ் நிலை. இந்தச் சூழலை அரசாங்கம் சரியாகப் புரிந்து கொள்ளாது போனால், ‘கோட்டா வீட்டுக்குக் போ’ போராட்டத்தைப் போன்ற போராட்டம் மீண்டும் உருவாகுவது தவிர்க்க முடியாததாகவே இருக்கும்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மும்பையில் பாரிய தீ விபத்து – ஒருவர் பலி

வசந்த முதலிகேவுக்கு 03 வழக்குகளில் பிணை- Video

பொருளாதார சபை வாராந்தம் கூட்டப்பட வேண்டும்