உள்நாடு

வினோராஜ் குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணை!

(UTV | கொழும்பு) –

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் 4 மணித்தியாலங்கள் புதன்கிழமை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் மேகசுந்தரம் வினோரஜ் தெரிவித்தார்.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிலிருந்து எனக்கு தொலைபேசி மூலம் விடுக்கப்பட்ட அழைப்புக்கு இணங்க புதன்கிழமை நான் அங்கு சென்றிருந்தேன். இதன்போது நான் அங்கிருந்த அதிகாரிகளால் 4 மணித்தியாலங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டேன்.

இராஜாங்க அமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தன்(பிள்ளையான்) அவர்கள் என்னைப்பற்றி பொலிஸ்மா அதிபரிடம் முன்வைத்த முறைப்பாட்டுக்கு அமைய குற்றத்தடுப்பு பிரிவினரால் நான் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டேன். இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களைப் பற்றி நான் முகப்புத்தகத்தில் பத்திவேற்றிய விடையங்கள் தொடர்பிலேயே நான் விசாசிக்கப்பட்டேன். என மேகசுந்தரம் வினோரஜ் மேலும் தெரிவித்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பன்னிப்பிட்டிய சம்பவம் தொடர்பில் லொறி சாரதிக்கு விளக்கமறியல்

மேலும் மூவருக்கு கொரோனா வைரஸ் –மொத்தம் 217 பேர் அடையாளம்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருதய சத்திரசிகிச்சை நிறுத்தம்