உள்நாடு

பெண்களை அதிகமாக தாக்கும் புற்றுநோயை!

(UTV | கொழும்பு) –

35 முதல் 45 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களும் கர்ப்பப்பை மற்றும் மார்பகப் புற்றுநோயை கண்டறிவதற்காக தங்கள் சுகாதாரப் பகுதியில் உள்ள பரிசோதனை நிலையத்திற்கு செல்லுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. பெண்களை தாக்கும் புற்றுநோய் தொடர்பில் சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

குடும்ப சுகாதார பணியகத்தின் சமூக மருத்துவ நிபுணர் பத்மக டி சில்வா தெரிவிக்கையில், பெண்களிடையே மிகவும் பொதுவான புற்றுநோய்களாக கருதப்படுபவை கர்ப்பப்பை மற்றும் மார்பக புற்றுநோய்களாகும். எனவே, இவற்றைக் கருத்தில் கொண்டு 35 முதல் 45 வயது வரையான பெண்கள் தமது பிரதேச வைத்தியசாலைக்கு சென்று சோதனை செய்துகொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இலங்கைக்கான அமெரிக்க தூதுவருக்கு அழைப்பு

இலங்கை இந்திய படகு சேவை விரைவில் ஆரம்பம் !

இரு முஸ்லிம் மாணவர்களின் மரணம் : அறிக்கை கோருகிறார் வடக்கு ஆளுநர் திருமதி சார்ள்ஸ்.