உள்நாடு

சாணக்கியன் பசுத்தோல் போர்த்திய புலி – ஹரீஸ் கண்டனம்!

(UTV | கொழும்பு) –

கிழக்கு மாகாண, மட்டக்களப்பு மாவட்டத்தில் பூர்வீக முஸ்லிம் கிராமங்களையும் குடியிருப்புக்களையும் கொண்டு வாழும் முஸ்லிங்கள் அவர்களின் விகிதாரசத்திற்கேற்ப மட்டக்களப்பு மாவட்டத்தில் காணிகள் இல்லாமல் வாழ்ந்து வருவது இந்த நாட்டிலுள்ள எல்லோருக்கும் நன்றாகத் தெரியும். மட்டக்களப்பு வாழ் முஸ்லிங்களின் சனத்தொகைக்கும் அவர்கள் வாழும் காணிகளின் அளவுக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசமிருக்கிறது. காணி விடயத்தில் பாரிய சிக்கல்களைச் சந்தித்து வரும் ஒரு சமூகமாகவே மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிங்கள் வாழ்கின்றனர் என நாவலடி காணி விடயம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரிஸ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் நாவலடி காணி விவகாரம் தொடர்பிலான அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் ஊடக வெளியீடொன்றை வெளியிட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, நாவலடியில் அத்துமீறி அடாவடித்தனமான முறையில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் செயற்பட்டிருப்பது கண்டித்தக்கதாகும். இவ்வளவு நாளும் பசுத்தோல் போர்த்திய புலியாக முஸ்லிம்களின் அனுதாபி போன்ற தோரணையில் செயற்பட்ட ஒருவர் பகிரங்கமாகவே முஸ்லிம்களுக்கு துரோகம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
இதன்மூலம் அவரின் சாயம் வெளுத்துள்ளது. ஏழை, எளிய மக்களின் காணியுரிமையை இல்லாமல் செய்கின்ற இந்த அத்துமீறிய நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது.

இக்காணி விவகாரம் தொடர்பில் அரச உயர்மட்டங்களுக்கு எடுத்துச்சென்று மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்கள் எதிர்நோக்கும் அவலநிலையை அவர்களுக்கு விளக்கி தீர்வைக்கோரத் தயாராகவுள்ளத்துடன், எமது கட்சித்தலைவர்களிடம் தற்போது பேசுபொருளாக மாறியுள்ள 13வது திருத்தம் சம்பந்தமான விடயங்களில் நாவலடியில் இரா.சாணக்கியன் போன்றோர்கள் நடந்து கொள்ளும் விடயங்களைக் கவனத்திற்கொண்டு முஸ்லிம்களின் இருப்புக்கு நிலையானதும் ஆதரவானதுமான தூரநோக்கு சிந்தனை கொண்ட முடிவுகளை எடுக்க முன்வர வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஆள் கடத்தல் காரர்களை கைது செய்ய விசேட நடவடிக்கைகள்

தடம்புரண்ட பொடி மெனிகே!

தொண்டமானின் பூர்வீக இல்லத்தில் தீ பரவல்