உள்நாடு

வெள்ளவத்தையில் நடந்த சம்பவம்: தமிழ் இளைஞன் பலி

(UTV | கொழும்பு) –

வெள்ளவத்தை பெட்ரிகா வீதி பகுதியில் 8 மாடி கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெள்ளவத்தை பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கட்டடத்தில் இருந்து கீழே விழுந்தவர் சிகிச்சைக்காக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள்

ரயில் கட்டணத்தை உயர்த்த அமைச்சரவை அனுமதி

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திலிருந்து வௌியேறிய அர்ஜுன!