உலகம்உள்நாடு

ரஷ்யாவில் முடிவுக்கு வந்த உள்நாட்டு போர் -புட்டின் அறிவிப்பு

(UTV | கொழும்பு) –

ரஷ்யாவில் முடிவுக்கு வந்த உள்நாட்டு போர் – வாக்னர் படை போராளிகளுக்கு நன்றி கூறிய புடின்
உக்ரைன் ரஷ்யப் போரில் ஒரு திருப்பமாக ரஷ்யாவில் உள்ள தனியார் ராணுவ மற்றும் வாடகை படை குழுவின் தலைவர் எவ்ஜெனி பிரிகோசின் தலைமையில் நடைபெற்ற ஒரு ஆயுதமேந்திய கிளர்ச்சியானது தற்போது பேச்சு வார்த்தை மூலம் முடிவுக்கு வந்துள்ளது.

இதுதொடர்பாக ரஷ்ய அதிபர் புதின் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அந்த அறிக்கையில் அவர் கூறப்பட்டுள்ளதாவது, ரஷ்யாவில் ரத்தம் சிந்துவதை தவிர்க்க இறங்கிய வாக்னர் வாடகை படை போராளிகள் மற்றும் தளபதிகளுக்கு நன்றி.

வாக்னர் போராளிகள் விரும்பினால் பெலாரஸுக்கு இடம்பெயர அனுமதிப்பதாகவோ அல்லது பாதுகாப்பு அமைச்சகத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவோ அல்லது அவர்களது குடும்பங்களுக்குத் திரும்பவோ அனுமதிக்கப்படும். என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,குறித்த அறிக்கையில் கிளர்ச்சிக்கு தலைமை தாங்கிய வாடகைபடை தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜின் பற்றி அவர் குறிப்பிடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஜீவன் தொண்டமான் இங்கிலாந்து அமைச்சர்களுடன் கலந்துரையாடல்!

ஒருநாள் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

இலங்கையின் வெளிநாட்டு ஒதுக்கம் 3.1 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிப்பு