உள்நாடு

தொடரும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு  மோசடி

(UTV | கொழும்பு) –  தொடரும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு  மோசடி

தாய்லாந்தில் உள்ள இலங்கை தூதரகம், தாய்லாந்தில் மோசடியான வேலை வாய்ப்புகள் குறித்து எச்சரித்ததுடன், இலங்கையர்களை இதுபோன்ற மோசடி வேலை வாய்ப்புகளில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

இலங்கைப் பிரஜைகள் தாய்லாந்தில் வேலைவாய்ப்பிற்காக குறிப்பாக தகவல் தொழில்நுட்பத் துறையில் (IT) பதவிகளுக்காக சந்தேகத்திற்குரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களால் ஈர்க்கப்படுவதை தாய்லாந்தில் உள்ள இலங்கை தூதரகம் சமீபத்தில் கவனித்ததாக பெங்கொக்கில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் நிரந்தர தூதரகம் தெரிவித்துள்ளது. .

பாதிக்கப்பட்டவர்கள் சட்டவிரோதமாக தாய்லாந்தில் இருந்து பெரும்பாலும் மியான்மருக்கு எல்லை வழியாக அழைத்துச் செல்லப்பட்டு கடுமையான கட்டுப்பாடுகளின் கீழ் பணிபுரிய சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் சிலர் சட்டவிரோதமாக நுழைந்ததற்காக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர் என மிஷன்ஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இந்த பாதிக்கப்பட்ட இலங்கையர்கள் அனைவரும் சுற்றுலா விசாவில் தாய்லாந்திற்கு வந்துள்ளனர், வந்த பின்னர் பணி விசாவாக மாற்றுவதாக உறுதியளித்தனர், அது வெற்றி பெறவில்லை. எனவே இலங்கை பிரஜைகள் இதுபோன்ற மோசடி வேலை வாய்ப்புகளில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். எந்தவொரு வேலை வாய்ப்பையும் எடுப்பதற்கு முன் தீவிர எச்சரிக்கையுடன்
செயற்படவும், ஆட்சேர்ப்பு முகவர்கள் மற்றும் எந்தவொரு நிறுவனத்தின் பின்னணியை சரிபார்க்கவும் கோரப்பட்டுள்ளது” என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்து குடிவரவு பணியகத்தின் இணையதளத்தில் இருந்து தாய்லாந்து விசா விவரங்களைப் பெற மக்கள் www.immigration.go.th. அனுகுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

IMF கலந்துரையாடல்கள் குறித்து நிதியமைச்சர் அறிவிப்பார்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் வேட்பாளர் யார்? விரைவில் தீர்மானம்

‘நிபா’ வைரஸ் குறித்து மக்களுக்கு அறிவுறுத்தல்!