உள்நாடு

கார் ஒன்றின் மீது போலீசார் துப்பாக்கி பிரயோகம்

(UTV | பொல்கஹவெல) – கார் ஒன்றின் மீது போலீசார் துப்பாக்கி பிரயோகம்

பொல்கஹவெல நீதிமன்றத்திற்கு அருகில், உத்தரவை மீறிச் சென்ற கார் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக்க தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹெரோயின் போதைப்பொருளை கடத்துவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸ் அதிகாரிகள் குழு ஒன்று காரை நிறுத்த முற்பட்டுள்ளனர்.

ஆனால் பொலிஸ் அதிகாரிகளை மீறி காரை ஓட்டிச் சென்றதால், ​​பொலிஸார் காரை நோக்கிச் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் காரின் டயருக்கு சேதம் ஏற்பட்டது.

சுமார் ஒரு கிலோ மீற்றர் வரை சென்ற காரை பொலிஸார் பின் தொடர்ந்து சென்று தடுத்து நிறுத்தி, அதில் இருந்த மூவரை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த காருக்குள் ஒரு மாத கைக்குழந்தை, ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்திடமிருந்து டீசல் கொள்வனவுக்கு யோசனை

அனைத்து பிரஜைகளுக்கும் புதிய அடையாள அட்டை விரைவில்

முன்னுரிமை பாதை திட்டத்தின் 2 வது கட்டம்