உள்நாடு

மோட்டார் வாகனங்கள் வைத்திருப்போருக்கான அறிவித்தல்

(UTV | கொழும்பு) –  மோட்டார் வாகனங்கள் வைத்திருப்போருக்கான அறிவித்தல்

தங்களது மோட்டார் வாகனங்கள் குறித்து கவனமாக இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பதிவாகின்ற மோட்டார் வாகன திருட்டு சம்பவங்கள் காரணமாக இவ்வாறு அறிவுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடிப்படையில், வெலிவேரிய பிரதேசத்தில் சுமார் 32 இலட்சம் ரூபா பெறுமதியான கார் திருடப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

பின்னர் பொலிஸார் தொலைபேசி தரவுகளை வைத்து விசாரணை நடத்தி ஒருவரை கைது செய்தனர்.

குறித்த சந்தேகநபர் 14 இலட்சம் ரூபாவுக்கு குறித்த வாகனத்தை கொள்வனவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அடியம்பலம் பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

வாகனத்தை திருடிய நபர் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான விசாரணைகளை வெலிவேரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது,

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

உள்நாட்டில் வாகனங்களை உற்பத்தி செய்வதில் இலங்கை கவனம்

நாட்டில் தொடர்ந்தும் கனமழை

அரசியல் கட்சிகளை பதிவு செய்யும் நடவடிக்கை இம்மாத இறுதியில் [VIDEO]