உள்நாடு

விசேட நிகழ்வுகளுக்காக அரசாங்க நிறுவனங்கள் மேற்கொள்ளும் செலவினங்களை இடைநிறுத்த தீர்மானம்

(UTV | கொழும்பு) –     விசேட நிகழ்வுகளுக்காக அரசாங்க நிறுவனங்கள் மேற்கொள்ளும் செலவினங்களை இடைநிறுத்துவதற்கு நாணய, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சு தீர்மானித்துள்ளது.

அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவும் இது தொடர்பான சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொதுச் செலவினங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அரச நிறுவனங்களால் நடத்தப்படும் நிகழ்வுகள், விழாக்கள், மாநாடுகள் உள்ளிட்ட அத்தியாவசியமற்ற மற்றும் முன்னுரிமையற்ற செலவினங்களை இடைநிறுத்துவதோடு, பொதுப் பணத்தை அவற்றிற்குப் பயன்படுத்தக் கூடாது என நேற்று சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.

ஜனாதிபதியின் பணிப்புரையின் பிரகாரம், ஜனாதிபதியின் செயலாளரும் ஆகஸ்ட் 15ஆம் திகதி சுற்றறிக்கையின் ஊடாக, அதற்கான ஏற்பாடுகளை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என அறிவித்துள்ளார்.

இதற்கமைய தற்போதுள்ள வரையறுக்கப்பட்ட நிதி இடங்களுக்குள் அவற்றின் நோக்கம் மற்றும் பிற வெளிப்புற நிகழ்வுகள் தொடர்பான நிகழ்வுகளுக்கான நிதி செலவினங்களை இடைநிறுத்துமாறு அரசாங்க நிறுவனங்களுக்கு உத்தரவிட்டது.

எவ்வாறாயினும், குறித்த விதிமுறைகளுக்கு மாறாக இன்னமும் இவ்வாறான செலவுகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுவதாக நிதி பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

நவம்பர் 25 ஆம் திகதி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டு அமைச்சின் செயலாளர் திரு.மகிந்த சிறிவர்தன, அனைத்து நிறுவனங்களின் தலைவர்களுக்கும் இந்த அறிவுறுத்தல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

ஜானகி சிறிவர்தன கைது

கொழும்பின் பல பகுதிகளில் நீர் வெட்டு

மீள ஆரம்பிக்கப்படும் களனி பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கை!