உள்நாடு

சட்டவிரோதமான முறையில் ஆஸி செல்ல திட்டமிட்ட 45 பேர் கைது

(UTV |  காலி) – சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்ல திட்டமிட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட குறைந்தது 45 பேர் உனவட்டுனவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையினரின் உதவியுடன் ஹபராதுவ பொலிஸில் கடமையாற்றிய உத்தியோகத்தர்களினால் குறித்த குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். பிடிபட்டவர்களில் ஏழு பெண்களும் மூன்று குழந்தைகளும் அடங்குவர்.

அவுஸ்திரேலியாவுக்குச் செல்வதற்கான நம்பிக்கையில் குழு கிட்டத்தட்ட ஒரு மாதமாக பல்வேறு இடங்களில் தங்கியிருந்தது.

இவர்கள் நேற்று வவுனியாவில் இருந்து பஸ்ஸில் ஹோட்டலுக்கு வந்துள்ளனர்.

அவர்கள் இன்று காலி நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Related posts

நுரைச்சோலை நிலக்கரி ஆலையின் ஒரு இயந்திரம் செயலிழந்துள்ளது!

பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு அபராதம் – உயர் நீதிமன்றம்

அரசாங்கத்தின் அறிவிப்பு சட்டத்திற்கு முரணானது – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போர்க்கொடி

editor