உள்நாடு

பல பகுதிகளில் நாளை 16 மணி நேரம் நீர் வெட்டு

(UTV | கொழும்பு) – நாளை (21) பல பிரதேசங்களுக்கு காலை 8.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை 16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, கஹஹேன, ஹங்வெல்ல, ஜல்தர-ரணால, கடுவெல, மாப்பிட்டிகம மற்றும் தொம்பே ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.

லபுகம நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நிலத்தடி நீர்த் தாங்கி சுத்தப்படுத்தப்படுவதால் நீர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

 சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்

ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதியை எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் உத்தியோகபூர்வமாக அறிவிக்க உள்ளது

கடந்த 24 மணித்தியாலயத்தில் 510 பேர் தொற்றாளர்களாக பதிவு