உள்நாடு

கொவிட் மீண்டும் தலைதூக்குகிறது

(UTV | கொழும்பு) – கடந்த ஏழு நாட்களில், கொவிட் தொற்றினால் 1178 நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளதோடு 41 கொவிட் தொடர்பான இறப்புகள் பதிவாகியுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று மற்றும் அதற்கு முந்தைய நாள் தலா ஐந்து கொவிட் இறப்புகள் பதிவாகியுள்ளன.

மேலும், கடந்த மூன்று மாதங்களுடன் ஒப்பிடுகையில், கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பத்து மடங்கு அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் பிரதி சுகாதார பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். தற்போது, ​​தினசரி 150, 200 பேர் கொவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையைக் கட்டுப்படுத்துவதற்கு அனைவரும் சரியான சுகாதார வழிகாட்டுதல்களை ஆதரிக்க வேண்டும் மற்றும் பின்பற்ற வேண்டும் என்று சுகாதார அமைச்சின் பிரதி சுகாதார பணிப்பாளர் நாயகம் வலியுறுத்தினார்.

இல்லாவிட்டால், எதிர்காலத்தில் இதன் பரவல் அதிகரிப்பதைக் காட்டலாம் என்றும், இதிலிருந்து பாதுகாப்பதற்காக கொவிட் நோய்த்தடுப்பு தடுப்பூசியின் அளவை அதிகரிக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Related posts

இலங்கை சமுத்திர சூழலைப் பாதுகாப்பதில் அதிக கவனம் தேவை

நாளை ரஞ்சனுக்கு போது மன்னிப்பு : உறுதியாக நம்புகிறேன் [VIDEO]

மக்கள் இல்லாத சரத் பொன்சேகாவின் பிரச்சாரக் கூட்டம்

editor