உள்நாடு

அமைச்சர் நிமல் சிறிபாலவிற்கு எதிராக விசாரணைகளை முன்னெடுக்க ஜனாதிபதி பணிப்பு

(UTV | கொழும்பு) – விமான போக்குவரத்து அமைச்சு மற்றும் தனியார் நிறுவனத்திற்கு இடையேயான கொடுக்கல் வாங்கல் தொடர்பில் எதிர்கட்சித் தலைவர் எழுப்பியிருந்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மீதான குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதன்படி, விசாரணைகள் நிறைவடையும் வரை துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பதவியில் இருந்து நிமல் சிறிபால டி சில்வா தற்காலிகமாக விலக நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

No description available.

Related posts

பெண்ணொருவரை ஏமாற்றிய விவகாரம் : ரஞ்சனை கைது செய்ய உத்தரவு!

மேலும் 594 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

மேலும் 43 பேர் பூரண குணம்