உள்நாடு

வழமைக்கு திரும்பும் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள்

(UTV | கொழும்பு) – சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் 6 நாட்களில் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

கச்சா எண்ணெய் இறக்கத்துடன் இன்று (மே 27) நாட்டுக்கான பணிகள் தொடங்கும் என அவர் டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

நேற்றைய (மே 26) நிலவரப்படி நாட்டில் 23022 மெட்ரிக் டன் டீசல், 2588 மெட்ரிக் டன் சூப்பர் டீசல், 39968 மெட்ரிக் டன் 92 ஒக்டேன் பெற்றோல், 7112 மெட்ரிக் டன் 95 ஒக்டேன் பெற்றோல் மற்றும் 3578 மெட்ரிக் டன் விமான எரிபொருள்கள் கையிருப்பில் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

தமது நாணய கொள்கை பற்றிய மத்திய வங்கியின் நிலைப்பாடு

கொழும்பில் பெருமளவில் ஆயுதம் தாங்கிய படையினர் குவிப்பு – காரணம் வெளியாகியது !

பயணக்கட்டுப்பாடு தொடர்ந்தும் நீடிப்பு