உள்நாடு

“எதிர்வரும் சில மாதங்களில் இலங்கைக்கு மிகவும் இக்கட்டான நிலை” – பிரதமர்

(UTV | கொழும்பு) – எதிர்வரும் சில மாதங்களில் இலங்கை மிகவும் இக்கட்டான காலத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர், இலங்கையின் பொருளாதாரம் ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது.

2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் 2300 பில்லியன் ரூபா வருமானம் காட்டப்பட்ட போதிலும், உண்மையான வருமானம் 1600 பில்லியன் ரூபா எனவும், அந்த வருடத்திற்கான அரச செலவீனம் 3300 பில்லியன் ரூபா எனவும், ஆனால் வட்டி அதிகரிப்பினால் அரசாங்கச் செலவு 4000 பில்லியனாக அதிகரித்துள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை 2400 பில்லியன் ரூபாவாகும் எனவும் அது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13 வீதமாக அதிகரித்துள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

திறைசேரி சட்டமூலங்களை வழங்குவதற்கான அனுமதி வரம்பை 3000 லிருந்து 4000 பில்லியனாக அதிகரிப்பதற்கான யோசனையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நேற்று (15) கூடிய அமைச்சரவை தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2019 நவம்பரில் இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு 7.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்படுவதாகவும், இன்று ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை கூட காணமுடியவில்லை எனவும், அதனை குறைக்க அடுத்த வாரத்திற்குள் 75 மில்லியன் அமெரிக்க டொலர்களை காண வேண்டும் எனவும் பிரதமர் தெரிவித்தார்.

இலங்கைக்கு ஒரு நாளுக்கான பெற்றோல் விநியோகம் மாத்திரமே உள்ளதாகவும், இந்திய கடனுதவியுடன் இரண்டு பெற்றோல் கப்பல்களும் இரண்டு டீசல் கப்பல்களும் வரவுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.

நாளாந்த மின்வெட்டு இன்னும் சில நாட்களில் 15 மணித்தியாலங்களாக அதிகரிக்கலாம் எனவும் ஆனால் அதற்கான நிதி இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போதைய சூழ்நிலையில் புதிய வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்படவுள்ளதாகவும், ஸ்ரீலங்கன் விமான சேவையை தனியார் மயமாக்க நம்புவதாகவும், எரிபொருள் மற்றும் மின்சாரத்தில் அரசாங்கத்திற்கு பாரிய நஷ்டம் ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தைரியம் என்பது முன்னெப்போதையும் விட கடினமானது எனவும், உண்மையான நிலைமை ஆபத்தானது என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Related posts

நண்பிகள் இருவர் ஒன்றாக தூக்கில் – கிளிநொச்சியில் பெரும் சோகம் (கடிதம்)

மைத்திரிபால குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னிலையில் ஆஜராகியுள்ளார்

MV XPress Pearl கப்பலில் எண்ணெய் கசிவு ஏற்படவில்லை