உள்நாடு

அனைத்து இபோச பேருந்துகளும் நாளை வழமை போன்று இயங்கும்

(UTV | கொழும்பு) –   அனைத்து இலங்கை போக்குவரத்து சபை பஸ்களும் நாளை வழமை போன்று இயங்கும் என இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.

சகல தொழிற்சங்கங்களுடனும் கலந்துரையாடியதன் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தலைவர் மேலும் தெரிவித்தார்.

இதன்படி நாளைய தினம் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபை பஸ்களுக்கு தேவையான பாதுகாப்பை வழங்குமாறு பாதுகாப்பு தரப்பினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதன்படி நாளை வழமை போன்று 5200 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இவற்றில் சுமார் 1500 தூரப் பேருந்துகள் உள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 43 சந்தேக நபர்கள் கைது

கைது செய்யப்பட்ட 61 பேரும் மீண்டும் விளக்கமறியலில்

ஏற்றுமதிப் பொருளாதாரத்தில் முக்கிய செயற்பாட்டாளராக ஹலால் கவுன்சில்!