உள்நாடு

காலி முகத்திடல் போராட்டத்திற்கு 9வது நாள்

(UTV | கொழும்பு) – நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு எதிர்ப்பு தெரிவித்து காலி முகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் 9ஆவது நாளாகவும் இன்று தொடர்கிறது.

குறித்த போராட்டத்தில் நேற்றைய தினம் கலைஞர்கள் மற்றும் பழங்குடியினர் உள்ளிட்ட பல தரப்பினர் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை, காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்திற்கு ஆதரவாக, யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம், ஜனநாயகத்திற்காக ஒன்றிணைந்த இளையோர்களின் ஏற்பாட்டில், தீப்பந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

Related posts

பிரதான மார்க்கத்தின் ரயில் சேவைகள் வழமைக்கு

இன்று முதல் 20 – 30 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி

நேற்று இனங்காணப்பட்ட 20 பேரில் 15 பேர் கடற்படையினர்