விளையாட்டு

அவிஷ்கவுக்கு சத்திரசிகிச்சை

(UTV | சிட்னி) – அவுஸ்திரேலிய இருபதுக்கு 20 போட்டியில் கலந்து கொண்டுள்ள அவிஷ்க பெர்னாண்டோ பயிற்சியின் போது முழங்காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயிற்சியின் போது அவிஷ்கவுக்கு இந்த துரதிர்ஷ்டவசமான காயம் ஏற்பட்டது, அதன் விளைவாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

அவுஸ்திரேலியாவில் இந்த சத்திரசிகிச்சை இடம்பெறவுள்ளதாகவும் அதன் பின்னர் அவிஷ்க சுமார் 3 மாதங்களுக்கு கிரிக்கெட் விளையாட முடியாது எனவும் அவுஸ்திரேலியாவில் இருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.

பூரண குணமடைய 6-7 மாதங்கள் ஆகும் எனவும், அவிஷ்க எதிர்வரும் கிரிக்கட் போட்டிகளை இழக்க நேரிடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் அவிஷ்கவுக்கு வெற்றிபெற வாய்ப்பு கிடைக்கவில்லை.

நுவான் துஷார மற்றும் ரமேஷ் மெண்டிஸ் ஆகியோரும் அவுஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் போது காயமடைந்துள்ளனர், பினுர பெர்னாண்டோ மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோர் கொவிட் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

விராட் கோலியின் சாதனையை முறியடித்த ரோகித் சர்மா

சிறந்த துடுப்பாட்ட வீராங்கனையாக தெரிவான சமரி!

இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டியில் தோல்வியை தழுவிய இலங்கை