உள்நாடு

எங்கள் கட்சியின் பாதுகாப்பு இராணுவ பாதுகாப்பை விட பலமானது

(UTV | கொழும்பு) – மக்கள் விடுதலை முன்னணி கட்சியின் விசேட பாதுகாப்பு நடவடிக்கையினாலேயே கட்சியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை தடுக்க முடிந்ததாக அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணி கட்சியினர் இன்று (31) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், “..இராணுவப் பயிற்சியின் பாதுகாப்பை விட கட்சித் தோழர்கள் அளிக்கும் பாதுகாப்பு பலமாக உள்ளது. தமது கட்சி மக்களைப் பாதுகாத்து வரும் கட்சியாகவே செயல்படுகிறது.

நேற்றைய தாக்குதலின் பின்னணியில் அரசியல் இருப்பது தெளிவாக புரிந்து விட்டது. இது குறித்த உண்மை நாட்டு மக்களுக்கு தெரியும். தாக்குதலுக்கு காரணமான குற்றவாளிகளை ஏற்கனவே அடையாளம் கண்டுவிட்டோம்..” என அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

சாதாரண – உயர்தர வகுப்புக்களை ஆரம்பிக்க தீர்மானம்

மக்களுக்கு நிவாரணம் வழங்கவும், பொது சேவைகளை பராமரிக்கவும் ரூ. 695 பில்லியன் துணை மதிப்பீடு

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் ஒருவருக்கும் கொரோனா