உள்நாடு

மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருள் குறித்து நாளை தீர்மானம்

(UTV | கொழும்பு) – நாளை (31) மற்றும் நாளை மறுதினம் (01) லங்கா ஐஓசி நிறுவனத்தின் ஊடாக மின்சார சபைக்கு நேரடியாக எரிபொருளை கொள்வனவு செய்ய முடியும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.

அடுத்த வாரத்திற்கு மின்சார சபைக்கு தேவையான எரிபொருளின் அளவு குறித்து நாளைய தினம் தீர்மானிக்கப்படுமென அவர் தெரிவித்துள்ளார்.

தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து குறுகிய காலத்திற்கு மின்சாரத்தை பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.

Related posts

கொரோனா வைரஸ் தொற்றாளர் விபரம் இதோ

இலங்கைக்கு 2, 500 பசுக்களை கொண்டுவர அரசு தீர்மானம்

இலங்கைக்கு நிதி உதவி வழங்க IMF இனது திட்டம்