உள்நாடு

கொழும்பின் பல பகுதிகளில் 16 மணித்தியால நீர் வெட்டு

(UTV | கொழும்பு) – வார இறுதியில் கொழும்பின் பல பகுதிகளில் 16 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

எதிர்வரும் சனிக்கிழமை (08) காலை 08 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (09) நள்ளிரவு 12 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) தெரிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு மாநகர சபை, தெஹிவளை – கல்கிசை மாநகர சபை, கோட்டே மாநகர சபை, கடுவலை மாநகர சபை, மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ, கொட்டிகாவத்தை – முல்லேரியா ஆகிய பிரதேசங்களுக்கு இவ்வாறு நீர் விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

சுதந்திரக் கட்சியின் ஒழுக்காற்று குழு மீண்டும் கூடுவதற்கு தீர்மானம்

இன்றும் சுழற்சி முறையில் ஒரு மணித்தியாலம் மின்வெட்டு

கராபிட்டிய வைத்தியசாலையில் 6 கொரோனா தொற்றாளர்கள் பதிவு