உள்நாடு

சில பிரதேசங்களுக்கு 8 மணித்தியாலங்களுக்கு நீர் ​வெட்டு

(UTV | கொழும்பு) – சில பிரதேசங்களுக்கு 8 மணித்தியாலங்களுக்கு நீர் ​வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

இன்று (12) காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை காலப்பகுதியில் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்தியாவசிய பராமரிப்பு வேலை காரணமாக இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில், தியகஹ, கெகனதுர, வெஹரஹேன, கந்தர, கொட்டகொட, குடாவெல்ல, திக்வெல்ல மற்றும் ரத்மலே ஆகிய பகுதிகளுக்கு இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இதுவரை 2,077 பேர் பூரணமாக குணம்

தற்போதைய நெருக்கடி நிலைமை : நீடிக்கும் கலந்துரையாடல்கள்

அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் நாளை இடம்பெறவுள்ளது