உலகம்

இந்திய இராணுவ முக்கிய அதிகாரிகள் பயணித்த ஹெலி விபத்து

(UTV |  தமிழ்நாடு) – இந்திய இராணுவ முக்கிய அதிகாரிகள் பயணித்த ஹெலிகொப்டர் ஒன்று விபத்திற்குள்ளாகியுள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

குறித்த விபத்து இந்தியாவின் தமிழ்நாடு குன்னூர் நீலகிரி மாவட்டம் காட்டேரி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இந்திய இராணுவ உயர் அதிகாரிகள் சென்றதாகக் கூறப்படும் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டரே இவ்வாறு இன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

வெலிங்டன் இராணுவ கல்லூரி ஆய்வுக்காக கோவையிலிருந்து இரு ஹெலிகொப்டர்கள் புறப்பட்டுச் சென்றன. இந்த ஹெலிகொப்டரில் ஒன்று குன்னூர் அருகே வெடித்துச் சிதறி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் சிக்கிய இந்த ஹெலிகொப்டரில் முப்படைத் தலைமைத் தளபதி விபின் ராவத் சென்றதாகக் கூறப்படுகிறது. அவருக்கு என்ன நடந்தது என்பது பற்றி உறுதியாகத் தெரியவில்லை.

உடனடியாக உயிரிழப்புகள் பற்றி எதுவும் உறுதி செய்யப்படாத போதிலும் 4 பேர் உயிரிழந்திருப்பதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

ஹெலிகொப்டர் விழுந்த இடத்தில் மீட்பு பணியில் இந்திய இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

நீலகிரியில் நிகழ்ந்த குறித்த இராணுவ ஹெலிக்கொப்டர் விபத்தில் 4 பேர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

விபத்தில் சிக்கிய இராணுவ ஹெலிகொப்டரில் 14 பேர் வரை பயணம் செய்ததாகவும், அதில் பயணம் செய்த 4 இராணுவ உயரதிகாரிகளின் நிலை என்ன என்பது குறித்து இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.

Related posts

கடந்த 36 மணி நேரத்தில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை

இங்கிலாந்து ராணி எலிசபெத் இறுதி சடங்குக்கு ரூ.100 கோடி செலவு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க – அன்டோனியோ குட்டரெஸ் இடையில் சந்திப்பு.