உலகம்

நிலக்கரிச் சுரங்க வாயுக் கசிவால் குறைந்தது 52 பேர் பலி

(UTV |  சைபீரியா) – ரஷ்யாவின் சைபீரியாவில் உள்ள லிஸ்ட்வியாஜ்னயா நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வாயுக் கசிவால் குறைந்தது 52 பேர் கொல்லப்பட்டதாக ரஷ்ய செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

ரஷ்யாவின் மிக மோசமான சுரங்கப் பேரழிவுகளில் ஒன்றாக இதுவும் பதிவாகியுள்ளது.

தொழில்துறை பாதுகாப்பு விதிகளை மீறிய சந்தேகத்தின் பேரில் லிஸ்ட்வியாஜ்னயா சுரங்கத்தின் இயக்குனர் மற்றும் துணை உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டதாக பிராந்திய விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.

காற்றோட்டம் தண்டு வாயுவால் நிரப்பப்பட்டதால் சுரங்கத் தொழிலாளர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகவும், மீதேன் வெடிப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

காற்றோட்டத் தண்டு வழியாக புகை பரவியபோது சுரங்கத்திற்குள் சுமார் 285 பேர் இருந்ததாக அவசரகால அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related posts

அமெரிக்க தூதரக கட்டடத்தை கைப்பற்றியது சீனா

டெல்லியில் மீண்டும் ஆட்சி அமைக்கிறார் அரவிந்த் கேஜ்ரிவால்

இணையத்தைக் கலக்கும் ‘புளூபெரி சமோசா‘!